தொடங்கியது வடமராட்சியில் சுற்றிவளைப்பு?


வடமராட்சி துன்னாலை குடவத்தை  பகுதியில் நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் நெல்லியடி பொலீஸார் குவிக்கப்பட்டு இன்று காலை முதல்  தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.சுற்றிவளைப்பில் 4 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 வாகனங்களும் பறிமுதல்  செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நெல்லியடி பொலீஸார் மற்றும் வல்லைப் பகுதி முகாமைத்துள்ள இராணுவத்தினரும் இணைந்து இத்தேடுதல் வேட்டையினை நடாத்தியுள்ளனர். தேடுதலில் சிலர் தம்பியோடியுள்ளதாகவும் நால்வரைக் கைது செய்துள்ளதுடன் உரிமைப்பத்திரம் இல்லாத வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

படையினருடன் இணைந்து காவல்துறை முன்னெடுத்துள்ள சுற்றிவளைப்பினால் அப்பகுதியில் மக்களிடையே பதற்ற நிலை உருவாகியுள்ளது.


No comments