சுவிசில் நினைவு கூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் மூத்த தளபதிகளின் நினைவு நாளும்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும்!

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதற் களப் பலியானபெண் மாவீரர் 2ம் லெப் மாலதிஉட்பட்டஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியானலெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்படபன்னிருவேங்கைகளின் நினைவேந்தலும் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 10.10.2020 சனி அன்று நினைவுகூரப்பட்டது.

பேர்ண் பிரதானதொடருந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள திடலில் கவனயீர்ப்பு ஒன்று கூடலுடன் முற்பகல் 11:30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு நிகழ்வானது  குறிக்கப்பட்ட இரு மணத்தியாலங்களில் நிறைவு பெற்று மீண்டும் மாலை 18:30 மணியளவில் உள்ளரங்கமண்டபநிகழ்வாகமுன்னெடுக்கப்பட்டது.

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பின்ஒருங்கிணைப்பில் இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடர், ஈகைச் சுடர்கள் ஏற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம், சுடர்வணக்கம, மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. 

தாய் நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்திற் கொண்டு ஆயுதமேந்தி இந்தியவல்லாதிக்கத்திற்கெதிராக வீரப் பெண்ணாக விடுதலைக்காய் வீறுகொண்டெழுந்து வித்தாகிவீழ்ந்த 2ம் லெப் மாலதிஅவர்களின்  நினைவு நாளானது தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவு கூரப்பட்டுகடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது.

கொரோனா நோய்த் தொற்றுப் பேரிடருக்கு மத்தியிலும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடைமுறைகளைப்பேணி இவ்வெழுச்சி நிகழ்வானது உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவரும் இணைந்துபாடியதனைத் தொடர்ந்துதாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. 


No comments