அடுத்தாண்டு நடுப்பகுதி வரை நாங்கள் போராட வேண்டும் - பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அடுத்தாண்டு நடுப்பகுதி வரை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராகப் போராடும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

பிரான்சில் நேற்று வெள்ளிக்கிழமை 40,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்களும் 298 இறப்புகளும் பதிவாகியுள்ளன. 

இந்நிலையிலேயே பிரான்ஸ் அதிபரின் கருத்து வெளியிட்டுள்ளார்.

ரஷ்யா, போலந்து, இத்தாலி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பிற நாடுகளும் புதிய உச்சநிலைகளைக் கண்டன.

No comments