MAS தொழிற்சாலையிலும் கொரோனா?


குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பியகமவில் உள்ள MAS ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சீதுவ பகுதியில் வசிக்கும் இவர், தம்பதெனிய ஆசிரியர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனாவின் அறிகுறிகளைக் காட்டியதால் சிகிச்சைக்காக கடந்த 21 ஆம் திகதி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலையில் இருந்து அறிவிக்கப்பட்ட கொரோனா தொற்றுறுதியான நபருடனான தொடர்பு காரணமாக அவர் வைரஸ் பாதிப்புக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பில் உள்ள ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments