சுமந்திரன் வீட்டிலும் குப்பி விளக்கு!


அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று  (செவ்வாய்க்கிழமை) இரவு, வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து ஒளி விளக்கொன்றினை ஏற்றுமாறு ஜனநாயகத்திற்கான ஒன்றிணைந்த இளையோர் அணி மக்களுக்கு விடுத்த கோரிக்கையினையடுத்து சுமந்திரனும் இருளினுள் சுடரேற்றினார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று  (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே குறித்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இன்று  20 ஆம் திகதி 20 ஆவது மணி (இரவு 8) நேரத்தில் உங்கள் வீடுகளில் ஒரு விழிர்ப்புணர்வு போராட்டத்தை நீங்கள் செய்ய வேண்டும்.


தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அது சார்ந்த சட்டங்களை பின்பற்றி, குறித்த மணி நேரத்தில் மூன்று நிமிடங்களுக்கு உங்களுடைய வீட்டின் மின் விளக்குகளை அணைத்து இருளாக இருக்கும் காலப்பகுதியில் ஒரு ஒளி விளக்கினை ஏற்றி உங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்துக்கொள்ள முடியும்' என தெரிவித்திருந்தனர்.

இவர்களது கோரிக்கைக்கு ஆதரவளித்து சுமந்திரன் தனது வதிவிடத்தில் ஒரு ஒளி விளக்கை ஏற்றியிருந்தார்.

அதேவேளை வல்லைபாலத்தில் இளைஞர்கள் சுடரேற்றி அஞ்சலித்திருந்தனர்.


No comments