தெற்கில் பலர் ஒளிந்திருக்கின்றனர்:சவேந்திர சில்வா?



இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகையால், எதிர்வரும் 7 நாள்கள் தீர்மானமிக்கவை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளாராம்.


யாழ்ப்பாணம், அநுராதபுரம், பதுளை, காலி, குருநாகல், மொனராகலை, புத்தளம் கேகாலை, களுத்துறை, கண்டி, மாத்தறை, பொலன்னறுவை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கடந்த 4 நாள்களில் கோவிட் -19 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.


சர்ச்சைக்குரிய மினுவங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய பலர் கொழும்பில் ஒளிந்திருக்கின்றனர்.


சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாத

ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 0113456548 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார்.

இதனிடையே கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இதுவரை எவரும் கொரோனா தொற்றிற்குள்ளானமை கண்டறியப்படவில்லை.


No comments