இலங்கை ஊடகவியலாளர்கள் கவனம்?


இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு வந்த

ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 13 ஆம் திகதி முற்பகல் 9.30 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட செய்தியாளர் ஒருவர் கொரோனா தொற்றாளர் என சந்தேகிப்பதாகவும் இது சம்பந்தமாக தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அனைத்து செய்தியாளர்களின் விபரங்களையும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் சுகாதார பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிக்காட்டல்களை சுகாதார பிரிவினர் செய்தியாளர்களுக்கு துரிதமாக வழங்குவார்கள் எனவும் தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு வேண்டுகோள் தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை ITN தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான பின்னர் அலுவலகத்திற்குள் நுழைய, வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது

No comments