நவாலியில் சடலம் மீட்பு!


மானிப்பாய் நவாலிப் பகுதியில் வயல் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை வயலில சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் நவாலியைச் சேர்ந்த 65 வயதுடைய செல்லத்துரை கனகரத்தினம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நவாலி பகுதியில் வயல் செய்துவரும் குறித்த வயோதிபர் நேற்று வயல் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இரவு ஆகியும் அவர் வீடு திரும்பாததால் குறித்த வயோதிபரை குடும்பத்தினர் தேடி உள்ளனர்.

எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் வயல் வழியாகச் சென்ற நபர் ஒருவர் மர்மமான முறையில் விழுந்து கிடப்பதை அவதானித்து உடனடியாக அப்பகுதி உள்ளவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். அத்துடன் மானிப்பாய காவல்துறையினருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments