கோப்பாயில் முன்னணியின் நினைவேந்தல் பிரிவு


கோப்பாயில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட இடத்தில், நினைவேந்தல் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக முன்னணியின் நினைவேந்தல் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சட்டத்தரணி வி.ணிவண்ணன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டு துறை பொறுப்பாளர் வீரா ஆகியோர் நேற்று மாலை ஊர் மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது அங்கு இந்த முறை நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு எற்படுகளை செய்து தருமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர்.

அதன் அடிப்படையில் ஊர் மக்களுடன் இணைந்து தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை அங்கு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக  முன்னணியின் நினைவேந்தல் பிரிவு அறிவித்துள்ளது.

No comments