நீலன் அமைப்பின் தலைவி அம்பிகா?

சிங்கள அரசுகளிற்கு கொந்தராத்து வேலை பார்த்து கொல்லப்பட்ட நீலன் திருச்செல்வம் அமைப்பின் தலைவராக தற்போது அம்பிகா உள்ளதாக

தகவல்கள் தெரிவிக்கின்றன.சுமந்திரனி;ன் பினாமி அமைப்பாக உள்ள நிலையில் தனது நாடாளுமன்ற கனவை சிதைத்தவர்களை அம்பிகா பழிவாங்க துடித்துவருகின்றார். 

பெண்களை இழிவாக நடத்துதல் மற்றும் வெறுப்பு பேச்சு ஆகிய காரணத்திற்காகவே புலம்பெயர் ஊடகத்திற்கு எதிராக கோரிக்கை கடிதத்தை அனுப்பிவைத்துள்ளதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் மன்றத்தின் தற்போதைய தலைவருமான உயர் நீதிமன்ற சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமது சட்ட பிரதிநிதி சட்டத்தரணி லக்ஸிகா பக்மிவெவ ஊடாக லிபாரா மொபைல் இணை-ஸ்தாபகர் பாஸ்கரன் கந்தையாவுக்குச் சொந்தமான இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தொலைகாட்சி வலையமைப்பான IBC தமிழுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை ஒகஸ்ட் மாதம் 18ம திகதி  அனுப்பி  திருந்தார்.

தமது நற்பெயருக்கு தீங்கு, மற்றும் அவதூறு விளைவிக்கும் இழிவான முறையில் தாம் காட்சிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டு, ஜுலை மாதம் ஒளிபரப்பான அரசியல் தொலைகாட்சி நிகழ்ச்சி சார்ந்து சற்குணநாதன் ஐந்து பக்கங்களைக் கொண்ட இந்தக் கோரிக்கைக் கடிதத்தினை இங்கிலாந்து முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளார். 

அரசியல் நையாண்டியில் ஈடுபடுவதற்கான உரிமையை ஏற்றுக்கொள்ளும் சற்குணநாதன், குறிப்பிட்ட காட்சிப்படுத்தல் ஆபாசமானதாகவும், பெண் வெறுப்பு சார்ந்ததாகவும், அதனால் தமது உரிமைகளை மீறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 IBC தமிழின் செயற்பாடுகள் ஊடக நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 5,000,000 பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுன்ட்டுகளையும், மன்னிப்பினையும் சற்குணநாதன் அவர்கள் கோரியுள்ளார். '

ஐந்து மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் என்பது தற்போதைய பண மதிப்பின் படி 122 கோடி 21 லட்சத்து 85 ஆயிரம் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments