சுமந்திரனிற்கு சிறீகாந்தாவும் சவால்?


சுமந்திரன் அவர்களுக்கு சட்டத்தரணி ஸ்ரீகாந்தா அவர்கள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட மேடையில் பொதுமக்கள் முன் பகிரங்க சவால் ஒன்றை விடுத்தார்.

சுமந்திரன் அவர்கள் இன்றைய பத்திரிகையில் விடுத்த செய்தி ஒன்றே இந்த சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.

சுமந்திரன் கலந்து கொள்ள இருந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரனும், ஸ்ரீகாந்தாவும் கலந்து கொள்ள மறுத்தது குறித்து அவர் தெரிவித்த ஏளனக் கருத்தே அதாவது "அவர்கள் விவாதத்துக்கு பயந்து ஒதுங்கிவிட்டார்கள்" என்று குறிப்பிட்டதன் விளைவே இந்தச் சவாலைத் தோற்று வித்திருக்கிறது.

" நானும் தம்பி சுரேஸ் பிரேமச்சந்திரனும் பொதுமக்கள் முன்னிலையில் சரியான வழிகாட்டு நெறியாளர் ஒருவர் மத்தியில் பகிரங்க விவாதத்துக்கு தயார். சுமந்திரன் தயாரா? இந்த அறிவிப்பை அவரது செய்தியை தாங்கி வந்த பத்திரிகை நாளை வெளியிடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் நிரம்பியிருந்த இளைஞர்களின் கரவோசையோடு அந்த சவால் வெளிடப்பட்டுள்ளது.

சுமந்திரன் இந்தச் சவாலை எதிர் கொள்வாரா?

No comments