தப்பியவர்கள் அகப்பட்டனர்?


பளைப் பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் நிறுவனத்துக்குள் புகுந்த வெடி மருந்துகளைத் திருட முயன்று, பின்னர் அவற்றை விட்டுவிட்டுத் தப்பியோடிய இவருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பளைப் பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் நிறுவனத்துக்குள் புகுந்த இரண்டு சந்தேக நபர்கள் அங்கு இருந்த வெடி மருந்துகளை திருடிக்கொண்டு வெளியில் வந்தபோது, நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கண்டதால் குறித்த வெடிமருந்து மூட்டையைப் போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அதன்போது, பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்கள் தப்பியோடிய மோட்டார் சைக்கிள் உட்பட இருவரையும் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்நிலையில், பாதுகாப்பு உத்தியோகத்தர் வழங்கிய புகைப்படத்தில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்கத் தகட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் மானிப்பாய், அளவெட்டி, ஏழாலை எனத் தேடப்பட்டனர்.

எனினும், சந்தேக நபர்களில் ஒருவர் எழுதுமட்டுவாழில் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். மற்றொருவர் அரியாலையில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேக நபர்கள் இருவரும் முகமாலைப் பகுதிக்கு கருக்கு மட்டை வெட்டுவதற்கு செல்பவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments