விபத்துக்குள்ளாது பிரித்தானியப் பிரதமரின் மகிழுந்து
பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் செய்த மகிழுந்து மீது மற்றொரு மகிழுந்து மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பிரதமர் உள்பட எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
வெஸ்மினிஸ்டல் வளாகத்திற்கு வெளியே நேற்று சில குழுக்கள் போராட்டம் நடத்தின. குர்திஷ் ஆதரவு குழுக்கள், பிரக்சிட் எதிர்ப்பு குழுக்கள் என மிகக் குறைவானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
வெஸ்மினிஸ்டரிலிருந்து டவுன் ஸ்டிரிட்டில் உள்ள தனது பிரதமர் அலுவலகத்திற்கு மகிழுந்தில் புறப்பட்டார் போரிஸ் ஜோன்சன்.
பிரதமர் ஜான்சனின் கார வெஸ்மினிஸ்டர் வாளாகத்தை விட்டு வெளியே வந்தபோது அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்களில் ஒருவர் பிரதமரின் மகிழுந்தை வேகமாக சென்று இடைமறித்தார்.
போராட்டக்காரர் திடீரென மகிழுந்தின் முன் வந்து நின்றதால் பிரதமரின் மகிழுந்து ஓட்டுநர் சடுதியாக நிறுதினார்.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த பாதுகாப்பு படையினரின் வாகனம் எதிர்பாராத விதமாக பிரதமரின் மகிழுந்தின் மீது வேகமாக மோதியது.
இந்த மோதலில் ஜான்சன் பயணித்த மகிழுந்தின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் நல்லகாலம் மகிழுந்தில் இருந்த பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பிரதமர் சென்ற மகிழுந்தை இடைமறித்து விபத்து ஏற்பட காரணமாக இருந்த அந்த போராட்டக்காரரை கைது செய்துள்ளர்.
Post a Comment