சாவகச்சேரியிலுள்ள சம்பிக்க ஆதரவு அதிகாரி கைது?


வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியும் இப்பாேது யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பாெலிஸ் அத்தியட்சகராகவும் உள்ள சுதத் அஸ்மடலவை பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு நேற்று (01) அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை விடுப்பது தொடர்பான முடிவை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் நாளை (03) அறிவிக்க இன்று தீர்மானித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்புப்பட்டதாக கூறப்படும் விபத்து சம்பவத்தில் போலியான சாட்சியங்களை தயாரிப்பதற்காகவே அவரை கைது செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2016ல் ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சம்பிக்க ரணவக்க கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments