திறக்கப்படுகின்ற திரையரங்குகள்!

இலங்கையில் கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ள திரையரங்குகளை அடுத்த மாதம் 2ஆம் திகதியிலிருந்து திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார்.
​எனினும்  திரையறங்குகளில்  50 சதவீதமான ஆசனங்களில் அமர்வதற்கே அனுமதி வழங்கப்படும் என்றார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (25) கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments