டிப்போவில் டீசல் திருடிய குற்றத்தில் 4 பேர் கைது!!

கோண்டாவில் டிப்போவில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஆறு பேருந்துகளில் டீசல் திருடப்பட்ட சம்பவத்தில்
4 பணியாளர்களான சந்தேகநபர்கள் கோப்பாய் பொலி்ஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


 இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் அனைத்தும் கோண்டாவில் பேருந்து நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தரித்து நின்ற 6 பேருந்துகளில் டீசல் திருடப்பட்டுள்ளதாக கடந்த 6 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோண்டாவில் சாலையின் உயர் அதிகாரிகள் இந்த முறைப்பாட்டினை கோப்பாய் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டில் 6 பேருந்துகளில் டீசல் திருடப்பட்டதாகவும் பேருந்து ஒன்றில் இருந்து ஒரு தொலைக்காட்சியும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பணியாளர்களான 4 பேர் கைது செய்யல்பட்டுள்ளனர்.

No comments