ஊரடங்குத்தளர்வு குறித்து விசேட அறிவிப்பு!

நாட்டின் 19 மாவட்டங்களில் எதிர்வரும் 9ம் திகதி காலை 6 மணி முதல் 4 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அரசாங்கம் இன்று (06) சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி (09) மாலை 4 மணிக்கு மீள அமுலாகும் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும்.

இதேவேளை யாழ்ப்பாணம், கொழும்பு, புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments