யாழினை கலக்கிய திருடர்கள் பலர் சிக்கினர்

யாழ்ப்பாணம் நகரில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை திருடியவர்களையும் திருடிய பொருட்களை வாங்கியவர்களையும் யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான கட்டிடம் நிர்மாணிக்கும் இடத்தில் இருந்து 5 இலட்சம் பெறுமதியான கட்டிடப் பொருட்கள் திருடப்பட்டதுடன் யாழ்.நகரப் பகுதிகளில் உள்ள கடைகளிலும் பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

இவ்வாறு 3 இடங்களில் இலத்திரனியல் பொருட்களைத் திருடிய, நாவாந்துறை, பொம்மைவெளி மற்றும் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த சுமார் 8 பேரை நேற்று (26) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

No comments