வீதியில் வீழ்ந்த முதியவர்; பறிபோனது உயிர்

யாழ்பாணம் - ஆனைப்பந்தி, நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் (வயது-65) என்பவரே உயிரிழந்தவராவார்.

உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையிலேயே முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

No comments