சீனாவே கொரோனாவை உருவாக்கி பரப்பியது- பரபரப்பு தகவல்

சீனாவின் ஆய்வுக் கூடத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் கொரோனா (கொவிட்-19) வைரஸ்.

இவ்வாறு எயிட்ஸ் நோய் பற்றிய ஆராய்ச்சிக்காக 2008ம் ஆண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் நுண்கிருமி ஆய்வு அறிஞர் லுக் மொன்டாகினியர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்தார். மேலும்,

சீனாவின் வூஹானில் உள்ள தேசிய உயிரியல் பாதுகாப்பு ஆய்வுக்கூடத்தில், கடந்த 2000ம் ஆண்டு முதல் எயிட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

அதற்கான ஆய்வின் போது கொரோனா நுண் கிருமியை மனிதர்கள் செயற்கையாக உருவாக்கினர். அந்த ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தின் போது, கொரோனா நோய் தொற்று வெளியில் பரவியிருக்கிறது. - என்றார்.

No comments