யாழில் 17 பேருக்கு உறுதியானது கொரோனா இல்லையென்பது!

யாழ்ப்பாணத்தில் இன்று கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய 17 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ் போதனா பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்று (04) யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தங்கி இருந்தவர்கள் மூவருக்கும் வைத்திய சாலைக்கு வெளியே தொற்றுக்கு உள்ளனவர்களுடன் தொடர்புடைய பதின்நான்கு பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இப்பரிசோதனை மானிப்பாய் பகுதியில் எட்டு பேருக்கும் அரியாலைப் பகுதியில் ஆறு பேருக்கும் செய்யப்பட்டது.

இவர்களில் ஒருவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments