24 நாட்கள் கடந்து வந்த கொரோனா! நடப்பதென்ன?

தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்து வீடு திரும்பிய மத்துகமையை சேர்ந்த ஒருவருக்கு 10 நாட்களின் பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று லங்காதீப சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 10ம் திகதி தென்கொரியாவில் இருந்து விரும்பிய குறித்த நபர் விமான நிலையத்திலிருந்து கந்தக்காடு தனிமைப்படுத்த முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து மார்ச் 24ம் திகதி தனது வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

வீடு திரும்பிய 10 நாட்களின் பின்னர் வயிற்று வலி மற்றும் பிற அறிகுறிகளினால் நாகொட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

No comments