கொரேனா தடைகள் மீறி திருமணம்! மணமகன் மணமகள் உட்பட 50 பேர் கைது!

தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுப்பதற்கு நாடு தழுவிய ரீதியில் பொதுவிடங்களில் மக்கள் ஒன்று சேர்வதற்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குவாசுலு என்ற இடத்தில் திருமண நிகழ்வு நடைபெறுகின்றது என காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் திருமணத்தை நடத்தி வைத்து பாதிரியார் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேரையும் கைது செய்து ரிச்சாட் விரிகுடாவுக்கு வெளியே அமைந்த காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று திங்கட்கிழமை அனைவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மணமகன் மணமகளை காவல்துறையின் வாகனத்தில் ஏற்றும் காணொலியும் வலைத்தளத்தில் பரவி வருகின்றது.

No comments