சுற்றிவளைத்த ஆமி; ஆவா வினோ சகாக்கள் சிக்கினர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா வினோதன் என்று பொலிஸாரால் விழிக்கப்படும் நபரின் பிறந்தநாளைக் கொண்டாடிய மூவர் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வினோதனின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவனது நண்பர்களால் இணைந்து மல்லாகம் - சேர்ச் லேனில் உள்ள வீடொன்றில் இன்று (06) மாலை முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் தகவல் கிடைத்து குறித்த வீட்டை இராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். இதன்போது மூவர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் சம்பவத்தின் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வினோதன் உள்ளிட்ட கொண்டாட்டத்தில் பங்கேற்ற பலர் இராணுவத்தினரின் வருகையறிந்து அங்கிருந்து தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments