இருவரை கைது செய்தது இராணுவம்?
வவுனியாவில் விஷேட அதிரடி படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து வாளும் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (03) மாலை 4 மணியளவில் வவுனியா பகுதியில் விஷேட அதிரடி படையினரினால் மேற்கொள்ளப்பட்ட விஷேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது வேப்பங்குளம் பகுதியில் வாளுடன் நடந்து சென்ற 24 மற்றும் 26 வயதுடைய இருவரை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment