வீடு தேடிச் சென்று விநியோகம்; மட்டுவில் முன்னுதாரணம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்லும் வேலைத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் உள்ள பதினாறு பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாக நியாய விலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வேலைத்திட்டமாக இது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சீனி, பருப்பு, கடலை, வெங்காயம், அரிசி, கோதுமை மா, பால் மா, உப்பு, டின் மீன் போன்ற பொருட்கள் போதியளவு உள்ளதாகவும் இவற்றை மக்களுக்கு நியாய விலையில் வழங்க எங்களது திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்தார்.

No comments