யாழிலும் கொரோனா?


யாழ்ப்பாணத்திற்கு மதப்பிரச்சாரங்களிற்கு வந்து சென்ற சுவிஸ்நாட்டு மதபோதகர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

குறித்த மத போதகர் இலங்கையிலிருந்து திரும்பியுள்ள நிலையில் சுவிஸ் தூதரகம் அவரது நிலை தொடர்பாக அறியத்தந்துள்ளது.

இதனிடையே குறித்த மதபோதகருடன் தொடர்புபட்ட மற்றும் அவர் தங்கியிருந்த பகுதிகள் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்துவருவதாக யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

குறித்த ஆய்வு அறிக்கைகளின் பின்னரே யாழிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாவென்பதை உறுதிப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாகவுள்ள அரியாலை பிலதெப்பியா தேவாலயம் உள்ளிட்ட சில தேவலாயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் குறித்த மதபோதகர் பிரச்சாரங்களை செய்துள்ளார்.

குறிப்பாக நவாலி,உடுப்பிடடி உள்ளிட்ட இடங்களில் அவரது நடமாட்டம் இருந்தமை உறுதியாகியுள்ளது.

இதனிடையே குறித்த மதபோதகரது வருகை மற்றும் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தொடர்புடைய தேவாலங்கள் உண்மையினை வெளிப்படுத்தாது மறைத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

No comments