சம்பந்தனுக்கு டெனிஸ் விடுத்த கோரிக்கை?

நாடாளுமன்ற தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயத்தை வலியுறுத்தும் வகையில் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டெனிஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில்,

அரசியல் ரீதியாக சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அப்போதிருந்த தமிழ் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்ததார்.

இதன் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் எத்தகைய பிளவு ஏற்பட்டாலும் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டம் இதுவரை உருவாக்கப்படாமை பாரிய குறையாகும்.

தேர்தல் காலத்தில் முன்னாள் போராளிகள் மேடைகளில் பேசுபொருளாக இருந்தாலும் தேர்தலின் பின்னர் அவர்கள் கைவிடப்படுகின்றனர். நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபை என்பவற்றுக்கு உரிய ஆசன ஒதுக்கீட்டின் ஊடாக புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் - எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments