அங்கயனா? பொருட்டாகவே எடுக்காத இலங்கை இராணுவம்!


படையினரால் சுற்றிவளைக்கபட்ட தனது கட்சி பிரமுகரது விடுதியை மீட்க அங்கயன் இராமநாதனால் கூட முடியாது போன பரிதாபம் நேற்றிரவு அரங்கேறியது.யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் 41 இளைஞர்கள் கைதாகியுமிருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடுதி அங்கயனது வலதுகையான உள்ளுராட்சி சபை பிரமுகர் ஒருவருடையதாகும்.அங்கு படையினர் தேடுதல் நடத்துவதை தடுக்க முற்பட்ட போதும் அது சாத்தியப்பட்டிருக்கவில்லை.அங்கு விரைந்து வந்த அங்கயனை படையினர் பொருட்படுத்தவேயில்லை.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

இராணுவத்துக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 41 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா? பிடியாணை உள்ளனவா? என்பது பெரும் குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரப்பட்டது. அவ்வாறான ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் 41 பேரும் விடுவிக்கப்பட்டனர் என ; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments