மனித எச்சங்களும் காணாமல் போகாமல் இருக்க போராட்டம்!

 மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழி எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (25) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம், சதொச வளாக மனித புதைகுழிக்கு அருகில் சென்று நிறைவடைந்தது.

குறித்த போராட்டத்தின் போது, சதோச புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் நீதியான விசாரணை நடாத்தக் கோரியும் சர்வதேச தலையீட்டை வலியுறுத்தியும் அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நேரடித் தலையீட்டையும் வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



No comments