தீயில் எரிந்து நாசமாகிய கடைத்தொகுதி?

மன்னார் - எருக்கலம்பிட்டி சந்தி 5ம் கட்டை பகுதியிலுள்ள 5 கடைகளை கொண்ட கடைத்தொகுதியில் இன்று (24) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த கடைத்தொகுதி இன்று அதிகாலை 1 மணிக்கு பின் திடீர் என தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக கடை உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தியதோடு, பேசாலை பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பொது மக்களின் உதவியுடன் தீயை அணைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த தீ விபத்தின் காரணமாக குறித்த கடை தொகுதியில் அமைந்துள்ள இரு கடைகள் முற்றாக தீயில் எரிந்துள்ள நிலையில் ஏனைய மூன்று கடைகள் தீயில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. உணவகம் மற்றும் மின் உபகரணம் திருத்தும் நிலையம் ஆகிய இரு கடைகளே எரிந்து நாசமாகியுள்ளது.

No comments