பகிடிவதை புரிந்த மாணவன் வீட்டில் தாக்குதல்

 யாழ்ப்பாணம் – மானிப்பாய், நவாலி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று (11) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தாக்குதல் சந்தேக நபர்களால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

முகங்களை மூடிக்கொண்டு சென்ற அடையாளம் தெரியாதோரால் இரவு 10 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்பாேது குறித்த வீட்டின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், சொத்துகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை காரணமாக அண்மையில் பல்கலைக்கழகத்தில் இருந்து வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீட்டிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டுக்கு அருகிலுள்ள CCTV காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments