உண்மையான ஓட்டோ சாரதிக்கு பரிசாம்?


ரஞ்ஜன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகளை இரகசியமாக அவரது உதவியாளருக்கு பணம் கொடுத்து கோத்தா தரப்பு வாங்கியமை உறுதியாகியுள்ளது.ஆயினும் அதனை ஓடடோ சாரதியொருவரே வழங்கியதாக கதைகள் அவிழ்த்துவிடப்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் அடங்கிய தகவல்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த முச்சக்கரவண்டி சாரதிக்கு 10 லட்சம் ரூபா பணப் பரிசு வழங்கவுள்ளதாக இலங்கை சுய தொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன அறிவித்துள்ளார்.
குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி தமது சங்கத்திடம் வந்தால், பொலிஸ் ஆலோசனையுடன் இந்த பணப் பரிசு அவருக்கு வழங்கப்படவுள்ளதாகவும் சுனில் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் இருந்த தவறான கருத்துக்கள் இந்த முச்சக்கர வண்டி சாரதியின் நடவடிக்கையினால் நீங்கியுள்ளதாகவும், இவரின் நடவடிக்கையினால் நாட்டில் மறைந்திருந்த பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
யாரோ ஒரு பயணி மறதியாக முச்சக்கர வண்டியில் விட்டுச் சென்ற இந்த தகவல்களை பொலிஸாரிடம் ஒப்படைத்த குறித்த சாரதி, பொலிஸில் ஆலோசனை பெற்றுக் கொண்டு தனது சங்கத்திடம் வருகை தந்தால், அவருக்கு இந்தப் பணத் தொகை வழங்கப்படும் எனவும் அச்சங்கத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

No comments