ரஞ்சன் வீட்டிற்கு:ஜதேக முடிவு!


பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி கூடவுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக முன்னாள் சிரேஸ்ட அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
ரஞ்ஜன் செய்துள்ள நடவடிக்கை அரசியல் ரீதியிலும், பொது மக்கள் மத்தியிலும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.  கட்சிக்குள் இருந்துகொண்டு ரஞ்ஜன் செய்துள்ள நடவடிக்கையை எம்மாள் அனுமதிக்க முடியாது.
அவரை தொடர்ந்தும் கட்சியில் வைத்துக் கொள்ளக் கூடாது. எதிர்வரும் புதன்கிழமை கட்சிக் குழுக் கூட்டத்தில் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளோம். தற்பொழுதும் கட்சியிலுள்ள பலர் இது தொடர்பில் தீர்மானம் எடுத்து முடிந்துள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளா

No comments