குண்டு தாக்குதல் விவகாரம்; மொரட்டுவை பீடாதிபதிக்கு பிடியாணை
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினி பீடாதிபதிக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 ஆம் திகதி தெஹிவளையில் உள்ள விடுதி ஒன்றில் தற்கொலை குண்டை வெடிக்கச்செய்து
இருவர் உயிரிழந்தமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேற்கொண்ட விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி கலந்துரையாடல் குறித்து மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினி பிரிவிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது.
பகுப்பாய்வு அறிக்கையை பொலிசாருக்கு சமர்ப்பிக்காமையால் நீதிமன்றத்தால் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை தெளிவுபடுத்துவதற்காக கணினி பிரிவின் பீடாதிபதியை மன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.
எனினும் நீதிமன்ற அழைப்பாணையை பொருட்படுத்தாததன் காரணமாக பீடாதிபதிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment