யாழ்ப்பாணம் போகின்றார் கோத்தா?

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளாராம்.அவருடன் பிரதமர் மகிந்தவும் வருகை தரவுள்ளாராம்..
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே இதனை தெரிவித்தார்..
வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் நீதிமன்றங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் தற்போது நாட்டுக்கு தெரிய வந்துள்ளது. கடந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

No comments