நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே துமிந்த விடுதலை!


மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவை,எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் விடுவிக்க கோத்தா முடிவு செய்துள்ளார்.

ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை கோத்தபாய திருப்பியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க எம்.பியின் அலைபேசிக் கலந்துரையாடல்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால், சாதகமான சூழ்நிலையொன்று தோன்றியிருப்பதாகவும் இதைப் பயன்படுத்தி, துமிந்த சில்வாவை விடுவிப்பது நல்லதென்றும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போதைய சூழலில் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் அண்மித்துள்ள நிலையில் துமிந்தவை விடுவிப்பதை பிற்போட கோத்தா கோரியுள்ளார்.

No comments