கூட்டமைப்பு முடிவு எடுக்கட்டும்:ரெமீடியஸ்!


யாழ்.மாநகர சபையில் நேற்றைய தினம் ஏற்பட்ட குழப்பகரமான நிலை அதனால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்திக்கு; பகிரங்கமான மன்னிப்பு கேரியுள்ளார் சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸ்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளி இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரிய அவர் கூட்டமைப்பினருக்கு தேர்தல் காலத்தில் மட்டும் தமிழீழ விடுலைப் புலிகளிற்கு  மதிப்பு கொடுப்பதாக காட்டிக் கொண்டு தமிழ் மக்களிடம் வாக்குகளை பெற்றுக் கொள்வார்கள்.ஆனால் பின்னர் இழிவு படுத்தி பேசி தரக்குறைவாக நடந்து கொள்வார்கள்.

அந்த பேச்சு மோதலின் போது நானும் ஆவேசப்பட்டேன். இல்லை என்று நான் சொல்லவில்லை. என்னை பொறுத்தமட்டில் அந்த சந்தர்ப்பத்தில் அது தவிர்க்க முடியாத ஒன்றாகும். என்னை பொறுத்தவரையில் கடவுளுக்கு மேலாக தாய் தந்தையை பார்க்கின்றேன். எனது தந்தை பிடித்த ஒவ்வொரு மீனும்தான் என்னை சட்டத்தரணியாக்கியது.


அந்த விடயத்தை இழிவு படுத்தினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல என்னுடைய சட்டத்தரணி தொழிலை மிகவும் இழிவுபடுத்தி அந்த கூட்டமைப்பின் உறுப்பினர் பேசியிருந்தார்.

நான் சட்டத்தரணியாக முதல் 11 வருடங்கள் யாரிடமும் பணம் வாங்காமல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களையும் இராணுவத்தால் பிடிக்கப்பட்டவர்களையும் வாதாடி விடுவித்தேன். யுத்தகாலத்திலும் இவ்வாறான வழக்குகளை பொறுப்பேற்று செய்தேன். இதனை நான் கர்வத்துடன் சொல்வேன்.

தமிழ் தேசியம் என்று இன்றுவரை பேசிக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் மக்களின் உள்ளத்தில் இல்லாத சாதி வேற்றுமை பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேசியம் என்பது ஒரு குழாம் ஒரு குடும்பம். அந்த தேசியத்தில் இவ்வாறான வேறுபாடு இருக்க முடியாது.அனைவரும் தமிழர் என்று சொல்வதுதான் தேசியம். இவ்விடயத்தில் அவர் சார்ந்த கட்சி இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments