இலங்கைக்கு ஆபத்தில்லையாம்?


ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்கள் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை இன்று (26) மாலை வெளியிடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்தளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் நேற்று இரவு சீன பெண் உட்பட இரு பெண்களும், பின்னர் சீன பெண்ணும் இலங்கை ஆணும் என மேலும் இருவர் என நால்வர் அங்கொடை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments