பல்கலைக்கழக மாணவிகள் மூவர் பலி!

அஜர்பைஜான் குடியரசின் வெஸ்டர்ன் காஸ்பியன் பல்கலைக்கழகத்தில் பயின்ற மூன்று இலங்கை மாணவர்கள் நேற்று முன் தினம் (09) மரணமடைந்துள்ளனர்.

அஜர்பைஜான் குடியரசின் பாகு என்ற இடத்தில் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தால் புகையை சுவாசித்து மூச்சுத் திணறி மரணமடைந்துள்ளனர்.

இதனை வெளிவிவகார அமைச்சு நேற்று இரவு உறுதி செய்துள்ளது.

No comments