இராணுவத்தை தாக்கிய குற்றம்; 8 பேருக்கு பிணை

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் அண்மையில் இராணுவ வீரரை நபர் ஒருவர் தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 இளைஞா்களும் இன்று (29) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த தைப்பொங்கல் தினத்தன்று நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு வெவ்வேறு பகுதிகளில் 8 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினரை நாகர்கோவில் பகுதிக்கு சென்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் தான் இந்த வழக்கில் முன்னிலையாவதாக உறுதியளித்திருந்தாா்.

இதற்கமைய இன்று காலை பருத்தித்துறை நீதிமன்றில் குறித்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில், 8 இளைஞா்களும் தலா 5 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை மற்றும் 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனா்.

No comments