நாளுக்கொன்று:கோத்தாவின் வெடிகள் மும்மரம்!


கோத்தபாயவின் திடீர் திடீர் அறிவிப்புக்கள் ஊடகங்களில் பெரும்பிரச்சாரங்களை வழங்கிவருகின்ற போதும் வழமை போலவே வடகிழக்கு மக்களிற்கு அதன் எச்சங்கள் கூட கிட்டாத கதை தொடர்கின்றது.

“நிர்மாணப்பணிகளுக்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது நிலவும் கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் நீண்டகால தாமதம் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் எனவே நடைமுறையிலுளன்ள சட்ட திட்டங்களை இலகுபடுத்தி, மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை முடியுமான அளவு குறைப்பது அரசின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் சகல சிறிய நகரங்களையும் முறையாகவும் அழகிய முறையிலும் அபிவிருத்தி செய்வதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். எடுத்துக்காட்டாக தலவாக்கலை, எல்ல மற்றும் கினிகத்ஹேன போன்ற நகரங்களை நவீனமயப்படுத்தக்கூடிய வழி வகைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வேரெஸ்ஸ கங்கைத்திட்டப் பணிகளை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

கழிவு முகாமைத்துவம் குறித்தும் இதன்போது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.

குப்பைகளை சேதனப் பசளைகளாக மாற்றுவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறும் அதற்காக அதிகபட்சம் தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்தார்.

புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் பங்களிப்பை பெற்று குவிந்திருக்கும் மணற் படிவுகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மணலின் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதன் மூலம் பல பிரதேசங்கள் முகங்கொடுத்துள்ள வெள்ள அச்சுறுத்தலுக்கும் தீர்வு வழங்க முடியும்.

பேர வாவிகளை சுத்தப்படுத்தும் திட்டத்தை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிப்பட்டது. இதன்போது பேர வாவிக்கு கழிவுகள் சேரும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள இடங்களை உடனடியாக மூடி விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.
எனினும் வடகிழக்கு தொடர்பில் வழமை போல ஏதும் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை.

No comments