புலனாய்வு பிரிவிற்கு கொலைகளிற்கு அங்கீகாரம்?


தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அனைத்து புலனாய்வு பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் புலனாய்வு பிரிவுகளை ஒழுங்குப்படுத்தல் மற்றும் அதிகாரமளிக்கும் சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் கூறியுள்ளார்.
அதற்கமைய, சட்டமூலமொன்றை உருவாக்குமாறு சட்டவரைவாளருக்கு ஆலோசனை வழங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments