சுவிஸ் தூதரகம் நாடகம் ஆடுகிறது- விமல் கதறல்

சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த இலங்கை பெண் ஒருவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒரு நாடகம் என்று அமைச்சர் விமல் வீரவன்ச  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

கடத்தப்பட்ட பெண் இலங்கையிலுள்ள எந்த பொலிஸ் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில் நாடகத்தின் இரண்டாம் பாகத்தை இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகம் நடிக்கிறது.

இதேவேளை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், வெள்ளை வான் அச்சத்தை உருவாக்கியுள்ளனர் - என்றார்.

No comments