வாசஸ்தலங்ளை விட மறுக்கும் அமைச்சர்கள்?

ரணிலின் முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் ஐந்துபேர் இதுவரையில் அமைச்சர்களுக்குரிய உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர்களான, ராஜித சேனாரத்ன, பி. ஹரிசன் மற்றும் கயந்த கருணாதிலக்க உட்பட ஐந்து பேர் இவ்வாறு அமைச்சர்களுக்கான உத்தியோகபுர்வ இல்லங்களை ஒப்படைக்காதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹரீன் பெர்ணாந்து மற்றும் நிரோசன் பெரேரா உட்பட முன்னாள் அமைச்சர்கள் தங்களது அமைச்சுக்களுக்கான வாசஸ்தலங்களை ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

No comments