தனித்து நாடாளுமன்றினை வெல்லுமாம் மொட்டு?
முஸ்லிம் மக்கள் தவறான எண்ணங்களில் இருந்து விடுபட்டு, எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் எங்களுக்கு 120 ஆசனங்கள்வரை பெற்றுக்கொள்ள முடியும். இதனால் சிறுபான்மையினர் இல்லாமலேயே எங்களால் பாராளுமன்ற பெரும்பான்மையயும் பெறமுடியும் என் அவர் பேசியிருந்தார்.
அதனால் முஸ்லிம் மக்கள் மீண்டும் சிந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. உங்களது உள்ளங்களை உங்கள் தலைவர்கள் மாசுபடுத்தியுள்ளனர். கோத்தபாய ராஜபக் ஷ அதிகாரத்துக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என அவர்கள் உங்களிடம் தெரிவித்திருந்தனர். என்றாலும் அவ்வாறு எதுவும் இடம்பெறப்போவதில்லை. இந்த அரசாங்கம் சிங்கள பெளத்த மக்களுக்கு போன்று தமிழ்–முஸ்லிம் மக்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். மீண்டும் நாட்டில் குண்டு வெடிக்கப்போவதில்லை.
அதனால் முஸ்லிம்கள் பிழையான எண்ணங்களில் இருந்து விடுபட்டு, எதிர்வரும் தேர்தலில் எங்களுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் .
Post a Comment