கோத்தாவிற்கு தலையிடி!



முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவிற்கு சிக்கலாகும் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய வழக்கு கடைசியாக 2014 ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறிய அமைச்சர், அச்சுவேலி காவல்நிலையப்பொறுப்பதிகாரி 17 சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்திற்கு வழக்குத் தொடர்பான உண்மைகளைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

வழக்கின் முன்னேற்றம் குறித்து ஜூன் 3 யாழ்ப்பாணப் பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டதனை தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஜூன் 11, 2025 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணையை இனிமேல் சிஐடியின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு கையாளும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2009 முள்ளிவாய்க்கால் யுத்த முடிவின் பின் காணாமல் போனவர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு குறித்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னரான காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் தெற்கில் பரபரப்பு தொற்றியுள்ளது. 


No comments