ரணில் - சஜித் இடையில் வெடித்தது போர்? புதுக் கூட்டணி உருவாக்கம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட, புதிய கூட்டணியை அமைப்பதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி தலைமை பிரச்சினையை தீர்க்க மறுத்த நிலையில், பிரேமதாச ஒரு புதிய, பரந்த கூட்டணியை உருவாக்க முடிவு செய்திருந்தார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

மேலும்,

குறித்த பரந்துபட்ட கூட்டணி தற்போது 95% உறுதிப்படுத்தப்பட்டதாகவும், ஜனவரி தொடக்கத்தில் இறுதி முடிவு அறிவிக்கப்படும். மேலும் புதிய கூட்டணியில் இணைவதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் சில பங்காளி கட்சியிகளின் உறுப்பினர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

அத்தோடு கட்சியின் தலைமை பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகவில்லை என்றால் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரிந்து சென்று புதிய கூட்டணியில் இணைவார்கள் என்றும் இதுவே அவர்களது நிலைப்பாடு. - என்றார்.

No comments