மன்னாரில் மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம்

மன்னாரில் சட்ட விரோத மணல் அகழ்விற்கு எதிராகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரன் தலைமையில் இன்று (27)  காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பொறுப்பற்ற பிரதேச செயலகங்கள் எதற்கு, சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வேடிக்கை பார்க்கின்றதா?, சட்ட விரோதிகளுக்கு உடந்தையாகவுள்ள புவிச்சரிதவியல் திணைக்களம் எதற்கு, வனத்தை வனாந்தரமாக்கும் வனத்திணைக்களம் எதற்கு? மன்னாரில் பாலைவனமாக்க போகின்றீர்களா? மண் மாபியாக்களை வளர்ப்பதா அரசின் நோக்கம்? உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதிய பாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு தோட்ட வெளியில் மண் அகழ்வில் ஈடுபட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கு கொண்ட அருட்தந்தை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இதன்போது பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

No comments