இணைகிறது பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான அரசியல் ரீதியிலான இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் புதன் கிழமை ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றுள்ளது. இதில் எவருக்கும் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.
இதன்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments